Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடிக்கு பயன்படுத்தப்படும் 10 நிறுவனங்கள்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவற்படை எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

பண மோசடிக்கு பயன்படுத்தப்படும் 10 நிறுவனங்கள்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவற்படை எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் மட்டும், 10 நிறுவனங்கள் தங்களின் வங்கிக் கணக்குகளைப் பண மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், குறிப்பாகச் சம்பந்தமில்லாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் டத்தோ ருஸ்டி முஹமட் இசா எச்சரித்துள்ளார்.

முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருந்தாலும், அவை மோசடி கும்பல்களின் 'வாடகை வங்கிக் கணக்குகளாக' பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். பொதுமக்கள் ஏதேனும் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்கள் அல்லது வங்கிக் கணக்குகளின் நம்பகத்தன்மையை 'Semakmule' அகப்பக்கம் வழியாகச் சரி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!