கெடா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம், அரிய மண் தனிமங்கள் திருடப்பட்டது தொடர்பில் புக்கிட் எங்காங் சிக், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவரின் அடையாளத்தை வெளியிடும்படி கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் சவால் விடுத்துள்ளார்.|
அந்த சீன நாட்டுப்பிரஜை, சுற்றுப்பயண விசா அனுமதியைப் பெற்று மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார். ஆனால், அந்த சீன நாட்டுப்பிரஜை, மந்திரி பெசார் கழகத்தில் வேலை செய்வதற்கான விசாவை எதற்காக பெற்றார் என்பதை சனூசி பதில் அளிக்க வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.
மந்திரி பெசார் கழகத்தில் வேலை செய்த அந்த சீன நாட்டுப்பிரஜை எதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிடிபட்டார்? அவருக்கும் மந்திரி பெசார் சனூசிக்கும் என்ன தொடர்பு? பல லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள அரிய மண் தனிமங்கள் திருப்பட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என்று மந்திரி பெசார் சனூசி கூறிய போதிலும், அந்த சீன நாட்டுப்பிரஜைக்கும் மந்திரி பெசாருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


