கெடா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம், அரிய மண் தனிமங்கள் திருடப்பட்டது தொடர்பில் புக்கிட் எங்காங் சிக், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவரின் அடையாளத்தை வெளியிடும்படி கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் சவால் விடுத்துள்ளார்.|
அந்த சீன நாட்டுப்பிரஜை, சுற்றுப்பயண விசா அனுமதியைப் பெற்று மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார். ஆனால், அந்த சீன நாட்டுப்பிரஜை, மந்திரி பெசார் கழகத்தில் வேலை செய்வதற்கான விசாவை எதற்காக பெற்றார் என்பதை சனூசி பதில் அளிக்க வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.
மந்திரி பெசார் கழகத்தில் வேலை செய்த அந்த சீன நாட்டுப்பிரஜை எதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிடிபட்டார்? அவருக்கும் மந்திரி பெசார் சனூசிக்கும் என்ன தொடர்பு? பல லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள அரிய மண் தனிமங்கள் திருப்பட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என்று மந்திரி பெசார் சனூசி கூறிய போதிலும், அந்த சீன நாட்டுப்பிரஜைக்கும் மந்திரி பெசாருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


