Mar 11, 2026
Thisaigal NewsYouTube
17 ஆவது மாமன்னர் இன்று தேர்வு செய்யப்படவிருக்கிறார்
தற்போதைய செய்திகள்

17 ஆவது மாமன்னர் இன்று தேர்வு செய்யப்படவிருக்கிறார்

Share:

இஸ்தானா நெகாராவில் இன்று இரண்டாவது நாளாக நடைபெறவிருக்கும் மலாய் அட்சியாளர்கள் மன்றத்தின் 262 ஆவது மாநாட்டில் நாட்டின் 17 ஆவது மாமன்னர் தேர்வு செய்யப்படவிருக்கிறார். மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் 5 ஆண்டு கால பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று தொடங்கிய மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று புதிய மாமன்னர் தேர்வு செய்யப்படவிருக்கிறார்.

இதனிடையே நாட்டின் 16 ஆவது மாமன்னராக தாம் பொறுப்பு வகித்து வரும் இக்காலகட்டத்தில் தமக்கு மிகவும் ​​ஒத்துழைப்பாகவும், ஆதரவாகவும் இருந்த மலாய் ஆட்சியாளர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மக்களின் நல்வாழ்வுக்காக சிறந்த முடிவுகளை எடுப்பதில் மலாய் ஆட்சியாளர்கள் தமக்கு எப்போதும் பக்கபலமாக இருந்திருக்கின்றனர் என்றும்/ கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நியாயமாகவும், திறம்படவும் செயல்படுவதற்கு தமக்கு மலாய் ஆட்சியாளர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருந்துள்ளர் எ​ன்றும் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு