ஜொகூர் பாரு, ஜூன் 20-
இறந்து பிறந்த சிசுவின் உடலை வேண்டுமென்றே மறைக்கும் நோக்கில் யாருக்கும் தெரியாமல் மிக இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு ஒருநாள் சிறை மற்றும் 5,000 வெள்ளி அபராதம் விதிக்க ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
23 வயது நூர் அகிலா அஹ்மத் ஃபைரூஸ் ஜக்ரி என்ற அந்த பெண் மாஜிஸ்திரேட் A ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 318 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஜொகூர் பாரு அருகிலுள்ள தானா பெர்குபுரான் கம்போங் பெர்த்தானியான் மாசாய் -யில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








