முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயருக்குக் கலங்கத்தை விளைவிப்பதற்காக விசாரணை என்ற போர்வையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வேண்டுமென்றே சதி வேலையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அந்த ஆணையம் மறுத்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது இப்படி ஒரு அபாண்டமான பழியைச் சுமத்துவது அந்த ஆணையத்தின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியில், உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெறுவதற்கு, வர்த்தகர் ஒருப்வரிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கியதாக டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபர் ஒருவர், நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுடின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


