முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயருக்குக் கலங்கத்தை விளைவிப்பதற்காக விசாரணை என்ற போர்வையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வேண்டுமென்றே சதி வேலையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அந்த ஆணையம் மறுத்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது இப்படி ஒரு அபாண்டமான பழியைச் சுமத்துவது அந்த ஆணையத்தின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியில், உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெறுவதற்கு, வர்த்தகர் ஒருப்வரிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கியதாக டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபர் ஒருவர், நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுடின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


