முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயருக்குக் கலங்கத்தை விளைவிப்பதற்காக விசாரணை என்ற போர்வையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வேண்டுமென்றே சதி வேலையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அந்த ஆணையம் மறுத்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது இப்படி ஒரு அபாண்டமான பழியைச் சுமத்துவது அந்த ஆணையத்தின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியில், உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெறுவதற்கு, வர்த்தகர் ஒருப்வரிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கியதாக டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபர் ஒருவர், நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுடின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


