Aug 6, 2026
Thisaigal NewsYouTube
RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.3-

RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சர் Rafizi Ramli தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, பெட்ரோல் நிலையங்களிலும், இரண்டாம் கட்டமாக, மானியம் பெறத் தகுதியானவர்களைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தும். 85 விழுக்காடு மக்கள் மானியம் பெற தகுதியுடையவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

தகுதியை நிர்ணயம் செய்யும் பணி பொருளாதார அமைச்சால் மேற்கொள்ளப்படும். இதற்கான ஒப்புதலைப் பெற அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், முதன்மைத் தரவுத்தள அமைப்பான PADU வை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும். PADU வை மீண்டும் திறப்பது உட்பட பிற முடிவுகளையும் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையால் எடுக்கப்படும்என் Rafizi Ramli குறிப்பிட்டார்.

கடந்த நவம்பரில், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னரே PADU பதிவின் இரண்டாம் கட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று Rafizi கூறியிருந்தார். பொருளாதார அமைச்சும் நிதி அமைச்சும் தகுதி அளவுகோல்களை செம்மைப்படுத்தி வருகின்றன. 2025 வரவு செலவுத் திட்டத்தில், RON95 பெட்ரோல் மானியத்தை 2025 மத்தியில் மறுசீரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

மானிய மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கும் சேமிப்பு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கையால் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதன் மூலம் அரசாங்கத்தால் 8 பில்லியன் ரிங்கிட் சேமிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு கட்ட விலை நிர்ணய முறை சிறந்த வழி என்றும், இது பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் ரஃபிஸி கூறியுள்ளார். எந்த முறையிலும் சில அபாயங்களும் சிக்கல்களும் உள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’