Apr 2, 2026
Thisaigal NewsYouTube
RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.3-

RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சர் Rafizi Ramli தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, பெட்ரோல் நிலையங்களிலும், இரண்டாம் கட்டமாக, மானியம் பெறத் தகுதியானவர்களைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தும். 85 விழுக்காடு மக்கள் மானியம் பெற தகுதியுடையவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

தகுதியை நிர்ணயம் செய்யும் பணி பொருளாதார அமைச்சால் மேற்கொள்ளப்படும். இதற்கான ஒப்புதலைப் பெற அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், முதன்மைத் தரவுத்தள அமைப்பான PADU வை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும். PADU வை மீண்டும் திறப்பது உட்பட பிற முடிவுகளையும் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையால் எடுக்கப்படும்என் Rafizi Ramli குறிப்பிட்டார்.

கடந்த நவம்பரில், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னரே PADU பதிவின் இரண்டாம் கட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று Rafizi கூறியிருந்தார். பொருளாதார அமைச்சும் நிதி அமைச்சும் தகுதி அளவுகோல்களை செம்மைப்படுத்தி வருகின்றன. 2025 வரவு செலவுத் திட்டத்தில், RON95 பெட்ரோல் மானியத்தை 2025 மத்தியில் மறுசீரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

மானிய மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கும் சேமிப்பு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கையால் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதன் மூலம் அரசாங்கத்தால் 8 பில்லியன் ரிங்கிட் சேமிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு கட்ட விலை நிர்ணய முறை சிறந்த வழி என்றும், இது பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் ரஃபிஸி கூறியுள்ளார். எந்த முறையிலும் சில அபாயங்களும் சிக்கல்களும் உள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்