May 18, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த 6 மாதங்களுக்கு நீர் தாங்க வல்லதாகும்
தற்போதைய செய்திகள்

அடுத்த 6 மாதங்களுக்கு நீர் தாங்க வல்லதாகும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.27-

சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளிலும் நீர் மட்டம் 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. இது இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழைக் காரணமாக வெப்ப மற்றும் வறண்ட வானிலை நிலவி வந்தாலும், வரும் மாதங்களில் அணை நீர் மட்டம் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

கடந்த மே 10 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை, பொதுவாக பெரும்பாலான பகுதிகளில் குறைந்த ஈரப்பதத்தையும் குறைந்த மழைப்பொழிவையும் கொண்டு வரும் என்று டத்தோ இஸாம் ஹாஷிம் கூறினார்.

இருப்பினும், அக்டோபரில் பருவமழை மாற்றக் காலத்திலும், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் அதே வேளையில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழையின் போதும் அணைகளில் நீர் மட்டம் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ இஸாம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி