Mar 13, 2026
Thisaigal NewsYouTube
3 கோடியே 30 லட்சம் மலேசிய மக்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கே முன்னுரிமை மாமன்னராக பதவியேற்கவிருக்கும் ஜோகூர் சுல்தான் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

3 கோடியே 30 லட்சம் மலேசிய மக்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கே முன்னுரிமை மாமன்னராக பதவியேற்கவிருக்கும் ஜோகூர் சுல்தான் திட்டவட்டம்

Share:

மலேசியாவை வழிநடத்துவதற்கு 17 ஆவது மாமன்னராக தாம் செய்யப்பட்டது ஒரு பதவி உயர்வு அல்ல. மாறாக, நாட்டின் தலைவர் என்ற முறையில் நேரத்தையும், பலத்தையும் அர்ப்பணிக்க வேண்டிய ஒரு பெரும் கடப்பாடாகும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் நலன்களை பாதுகாப்பது தம்முடைய முன்னுரிமை அல்ல. மாறாக, இந்நாட்டில் உள்ள 3 கோடியே 30 லட்சம் மலேசிய மக்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கே முன்னுரிமையாகும். அவற்றை பாதுகாப்பதே தமது முதன்மையான கடமையாகும் என்று சுல்தான் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

தாம் ஏற்கனவே பாசீர் கூடாங்கில் உரை நிகழ்த்தியது போல நாட்டில் பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமி ஒன்று நாட்டில் பரவியுள்ளது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்களின் நலன்களைவிட தங்களின் நலன்களே முக்கியம் என்று கருதி அதிகாரத்தை கைப்பற்றி, தங்களின் நிலையை உறுதி செய்து கொள்வதற்காக அவதூறுகளை பரப்பி, மக்களை பிளவுப்படுத்தி, பேதங்களை விளைவிக்க துணிந்து விட்ட அரசியல்வாதிகளால் இந்த வைரஸ் உருவாகியுள்ளதாக சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதே தமது தலையாய கடமையாகும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று ஜோகூர்பாருவில் டேவான் சிங்காசனா இஸ்தானா பெசார் ஜொஹோரில் நடைபெற்ற சுல்தானின் 65 ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்வில் சுல்தான் இப்ராஹிம் மேற்கண்டவாறு கூறினார். அவரின் உரை, சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!