Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

ஜன.15-

16 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பில் இராணுவ தளபதிகளையும் உயர்மட்ட அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியான செய்தியை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கும், தளபதிகளின் பணிநீக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவை நாட்டின் பாதுகாப்பிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொய்யான செய்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது. அரசாங்கம் Weststar Aviation Sdn Bhd நிறுவனத்துடன் அரசு பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர் குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி