சிலாங்கூர்,ஜூலை 14-
அம்பாங் ஜெயா, கெமென்சா வெப்பமண்டல பூங்காவில் அமைந்துள்ள வீடொன்றில் பணியாற்றி வந்த இந்தோனேசியப் பணிப் பெண்ணைப் போலீசார் காப்பாற்றி உள்ளனர்.
41 வயதான அந்த இந்தோனேசிய பணிப்பெண், வீட்டின் முதலாளியால் நீண்ட நாட்களாக கொடுமைப்படுத்தியதாக தெரிவந்துள்ளது என அம்பாங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில், கூறினார்.
அந்தப் பணிப் பெண்ணுக்கு சம்பளப் பணம் கொடுக்காமல், அறையில் பூட்டி வைத்து அடித்து கொடுமை படுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்ததால், போலீசார் வெள்ளிக் கிழமை அன்று 45 வயதான முதலாளியை நள்ளிரவு 12.45க்கு கைது செய்துள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக , போலீசார் வீட்டின் முதலாளியை 5 நாள் காவலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.








