May 24, 2026
Thisaigal NewsYouTube
புலாவ் தெங்கோல் - யில் ஒரு பெண் மரணம் அடைந்தார்
தற்போதைய செய்திகள்

புலாவ் தெங்கோல் - யில் ஒரு பெண் மரணம் அடைந்தார்

Share:

டுங்குன், செப்டம்பர் 21-

டுங்குன் - இல் அமைந்திருக்கும் புலாவ் தெங்கோல் - வில் 33 வயதுடைய பெண்மணி ஒருவர் சனிக்கிழமையன்று உள் நீச்சல் அடிக்கும் பொழுது நீரில் மூழ்கி மரணம் அடைந்தார். அவர், சேரஸ், கோலாலம்பூர் - யை சேர்ந்தவர், சிகிச்சைக்காக டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர் மற்றும் சுப்பரின்டெண்டென் - ஆன மைசூரா அப்துல் காதிர் உறுதி செய்தார்.


சம்பவத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் 28 உள் நீச்சல் அடிப்பவர்களுடன் சேர்ந்து காலை 9 மணியளவில் இரண்டு 'guide diving' அதிகாரிகளுடன் ஸ்கூபா உள் நீச்சல் நடவடிக்கையை மேற்கொண்டார். இருப்பினும், அனைத்து உள் நீச்சல் அடிப்பவர்கள் தண்ணீரின் மேற்பரப்பில் திரும்பிச் சென்ற பிறகு, பாதிக்கப்பட்டவர் வெளிவரவில்லை என்பது கண்டறியப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவரைத் தேட இரண்டு அதிகாரிகளும் மீண்டும் உள் நீச்சல் செய்தனர்.

Related News