Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 உயர்வு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 உயர்வு

Share:

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 இடங்களில் இருக்கின்றவர்கள் நிவாரண மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில அரசாங்க செயலாளர் டான் ஸ்ரீ டாக்டர் ஆஸ்மி ரோஹனி கூறினார்.

வெள்ளப்பெருக்கில் கோத்தா திங்கி இருப்பிடம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 793 பேர் 8 வெவ்வேறு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஆஸ்மி ரோஹனி கூறினார்.

மெர்சிங், ஜாலான் கம்பூங் ஒராங் அஸ்லி பெட்டா மற்றும் கோத்தா டிங்கி, ஜாலான் மாவாய் லாமா ஆகிய இரு சாலைகள் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டிருப்பதோடு நாளை வரை ஜொகூரில் கடும் மழை நீடிக்கும் என்று மெட்மலேசியா முன்னதாக அறிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News