Jul 5, 2026
Thisaigal NewsYouTube
22 மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானது
தற்போதைய செய்திகள்

22 மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானது

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.07-

22 மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வேன் ஒன்று டிரெய்லர் லோரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகலில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர் பாரு, பண்டார் டத்தோ ஓனிற்கு வெளியேறும் சாலையில் நிகழ்ந்தது.

பிற்பகல் 1.10 மணியளவில் இவ்விபத்து குறித்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து தெப்ராவ் மற்றும் கெம்பாஸ் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து பத்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் கமாண்டர் முகமட் அஸிஸி ஸாகாரியா தெரிவித்தார்.

இதில் வேன் ஓட்டுநர் வாகனத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய வேளையில், மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர். முன்னதாக இதர மாணவர்கள், பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஓட்டுநர், சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது