கோலாலம்பூர், டிச.
ரிங்கிட்டின் மதிப்பின் மீட்சி , கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் குறைந்த வேலையின்மை விகிதம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கையை அதிகரிக்கும் நேர்மறையான அறிகுறிகளில் அடங்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அஜீசன் தெரிவித்தார்.
மலேசியா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் வலுவான பாதையில் உள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டில் ஐந்து சதவீதத்தை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப் படுவதாகவும் அமீர் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.








