இன்று ஹஜ்ஜுப் பெருநாள் பொது விடுமுறையையொட்டி பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது. வாகனங்கள் பழுதடைந்தது, விபத்து போன்ற காரணங்களினால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் அறிவித்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 155.3 ஆவது கிலோ மீட்டரில் பினாங்கு ஜாவியில்யில் இருந்து பண்டார் சேசிய ரிவர் வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பிளஸ் தெரிவித்துள்ளது. இதே போன்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 263.4 ஆவது கிலோமீட்டரில் ஈப்போ சுரங்கப்பாதைக்கு அருகில் பேருந்து பழுதடைந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


