இன்று ஹஜ்ஜுப் பெருநாள் பொது விடுமுறையையொட்டி பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது. வாகனங்கள் பழுதடைந்தது, விபத்து போன்ற காரணங்களினால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் அறிவித்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 155.3 ஆவது கிலோ மீட்டரில் பினாங்கு ஜாவியில்யில் இருந்து பண்டார் சேசிய ரிவர் வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பிளஸ் தெரிவித்துள்ளது. இதே போன்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 263.4 ஆவது கிலோமீட்டரில் ஈப்போ சுரங்கப்பாதைக்கு அருகில் பேருந்து பழுதடைந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


