புத்ராஜெயாவில் 14 க்கும் மேற்பட்ட வாகனங்களை மோதித்தள்ளி, இருவருக்கு மரணம் விளைவித்ததுடன், எழுவர் படுகாயம் அடைவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவரை நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலையில் அனுமதி அளித்தது.
பூச்சோங்கை நோக்கிச் செல்லும் ஜாலான் பெர்சியாரான் உத்தார 5.7 ஆவது கிலோமீட்டரில் தமது டிரெய்லர் லோரியில் 11 வாகனங்களை மோதித் தள்ளியதாக கூறப்படும் 29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரொஹானுடின் அனுமதி அளித்தார்.
சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் உட்பட 14 வாகனமோட்டிகளின் வாகனங்களை அந்த டிரெய்லர் மோதி தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணமுற்றனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


