புத்ராஜெயாவில் 14 க்கும் மேற்பட்ட வாகனங்களை மோதித்தள்ளி, இருவருக்கு மரணம் விளைவித்ததுடன், எழுவர் படுகாயம் அடைவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவரை நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலையில் அனுமதி அளித்தது.
பூச்சோங்கை நோக்கிச் செல்லும் ஜாலான் பெர்சியாரான் உத்தார 5.7 ஆவது கிலோமீட்டரில் தமது டிரெய்லர் லோரியில் 11 வாகனங்களை மோதித் தள்ளியதாக கூறப்படும் 29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரொஹானுடின் அனுமதி அளித்தார்.
சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் உட்பட 14 வாகனமோட்டிகளின் வாகனங்களை அந்த டிரெய்லர் மோதி தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணமுற்றனர்.

Related News

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்


