புத்ராஜெயாவில் 14 க்கும் மேற்பட்ட வாகனங்களை மோதித்தள்ளி, இருவருக்கு மரணம் விளைவித்ததுடன், எழுவர் படுகாயம் அடைவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவரை நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலையில் அனுமதி அளித்தது.
பூச்சோங்கை நோக்கிச் செல்லும் ஜாலான் பெர்சியாரான் உத்தார 5.7 ஆவது கிலோமீட்டரில் தமது டிரெய்லர் லோரியில் 11 வாகனங்களை மோதித் தள்ளியதாக கூறப்படும் 29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரொஹானுடின் அனுமதி அளித்தார்.
சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் உட்பட 14 வாகனமோட்டிகளின் வாகனங்களை அந்த டிரெய்லர் மோதி தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணமுற்றனர்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


