Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புகைமூட்டம் கடுமையானால் பள்ளிகள் மூடப்படுமா?
தற்போதைய செய்திகள்

புகைமூட்டம் கடுமையானால் பள்ளிகள் மூடப்படுமா?

Share:

நாட்டில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமடையுமானால், பள்ளிகள் மூடப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து சுகாதார அமைச்சிடம், ஆலோசனைப் பெறப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு வழங்கக்கூடிய ஆலோசனையை பொறுத்தே பள்ளிகள் மூடப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார.

நாட்டில் 16 பகுதிகளில் புகைமூட்டம் மோசமடைகிறது என்பதற்கு அப்பகுதியில் பதிவாகியுள்ள காற்றின் தூய்மைக்கேட்டின் குறியீடு காட்டுவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் ஃபட்லினா சிடெக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News