நாட்டில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமடையுமானால், பள்ளிகள் மூடப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து சுகாதார அமைச்சிடம், ஆலோசனைப் பெறப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வழங்கக்கூடிய ஆலோசனையை பொறுத்தே பள்ளிகள் மூடப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார.
நாட்டில் 16 பகுதிகளில் புகைமூட்டம் மோசமடைகிறது என்பதற்கு அப்பகுதியில் பதிவாகியுள்ள காற்றின் தூய்மைக்கேட்டின் குறியீடு காட்டுவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் ஃபட்லினா சிடெக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


