May 21, 2026
Thisaigal NewsYouTube
21 எஸ்.பி.எம் மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்
தற்போதைய செய்திகள்

21 எஸ்.பி.எம் மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்

Share:

பெக்கான், ஜன -10

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 எஸ்.பி.எம் மாணவர்களை பெக்கான் மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) இரண்டு வெவ்வேறு தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தங்க வைத்துள்ளனர்.

பள்ளி ஆசிரியர்கள், தீயணைப்பு மீட்ப்படையினர் ஆகியோரின் உதவிகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாதுகாப்பாக குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஒருவர் நெனாஸி பள்ளியிலும் மற்ற மாணவர்கள் பாலோ ஹினாய் பள்ளியிலும் தங்க வைத்திருப்பதாக பெக்கான் மாவட்டக் கல்வி அதிகாரி முஹமாட் ரசாலி முஸ்டஃபார் தெரிவித்தார்.

வெள்ளம் முழுமையாக குறைந்த பிறகு மட்டுமே அம்மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதாக முஹமாட் ரசாலி அறிவித்தார்.

எஸ்.பி.எம் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்வதை தடுப்பதற்கு இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக முஹமாட் ரசாலி கூறினார்.

Related News