கோலாலம்பூர், ஏப்ரல்.29-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு அகாடமியின் புதிய மூத்த இயக்குநராக டத்தோ கருணாநிதி ஒய். சுப்பையா இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பொறுப்பு ஒப்படைப்பு விழாவில், முன்னாள் இயக்குனர் Dato’ Mohd Hafaz Nazar, புதிய இயக்குநரிடம் பொறுப்புகளை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 17 முதல் SPRM-இன் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள Dato’ Mohd Hafaz, அகாடமியில் பணியாற்றிய அனுபவம் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியப் பயணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
SPRM-இன் துணை ஆணையர் Dato' Indera Junipah Wandi தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆணையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாற்றத்தின் மூலம் ஊழல் தடுப்புப் பயிற்சிகள் மற்றும் விசாரணைகள் புதிய வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








