ஈப்போ, கம்போங் குனூங் ராபாட்டில் ஐந்து நண்பர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஈப்போ மாநகரில் போதைப்பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 15 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.
20 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தற்போது அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


