ஈப்போ, கம்போங் குனூங் ராபாட்டில் ஐந்து நண்பர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஈப்போ மாநகரில் போதைப்பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 15 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.
20 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தற்போது அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


