ஈப்போ, கம்போங் குனூங் ராபாட்டில் ஐந்து நண்பர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஈப்போ மாநகரில் போதைப்பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 15 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.
20 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தற்போது அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


