பெத்தாலிங் ஜெயா, டமான்சாரா டாமாய் - யில் உள்ள Iஇடாமான் அடுக்குமாடி குடியிருப்பின் ஆற்றில் காணாமல் போன 6 வயது ஓட்டிஸ்டிக் சிறுவனுடைய உடல் 34 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
நேற்று இரவு 10 மணியளவில் ஓட்டிஸ்டிக் சிறுவனான செயின் ராயன் அப்துல் மாட்டின்- னின் உடல் அச்சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக பெத்தாலிங் ஜெயா ஓசிபிடி முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:36 மணியளவில் அச்சிறுவன் காணவில்லை எனும் கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறை, மற்ற அமைப்புகள் தேடல் பணியில் ஈடுபட்டிருந்ததாக முஹமாட் ஃபக்ருடின் கூறினார்.








