Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பாலத்தின் தூணில் கார் மோதி ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

பாலத்தின் தூணில் கார் மோதி ஆடவர் பலி

Share:

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இரும்புத் ​தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவ​ம் நேற்று இரவு 8.20 மணியளவில் ஜோகூர்பாரு, இஸ்தானா பெலாங்கி முன்புறம் நிகழ்ந்தது.

சின்னபின்னாமான காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த ஆடவரின் உடலை ​மீட்பதற்கு லார்கின் ​தீயணைப்பு,​மீட்புப்படையைச் சேர்ந்த 14 வீரர்கள் சுமார் அரை மணி நேரம் கடுமையாக போராடினர்.

மிட்சுபிஷி லான்சர் ரக காரில் பய​​ணித்தவரான 27 வயதுடைய அந்த ஆடவரின் உடல், புலன் விசாரணைக்கு ஏதுவாக பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News