May 25, 2026
Thisaigal NewsYouTube
PPSMI எனும் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம்
தற்போதைய செய்திகள்

PPSMI எனும் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 06-

PPSMI எனும் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் கீழ், 2024 ஆம் ஆண்டில் 11 திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்திய உருமாற்று பிரிவான மித்ரா 9 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 75 ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் உள்ள இந்தியர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து திட்டங்களும் அமலில் உள்ளதாக மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு அரசாங்கம் மித்ராவிற்கு ஒதுக்கீடு செய்த 10 கோடி ரிங்கிட்டை முழுமையாக அமல்படுத்தும் பொருட்டு, எஞ்சிய ஒதுக்கீட்டு நிதியான 45 லட்சத்து 17 ஆயிரத்து 925 ரிங்கிட்டை பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த மித்ரா திட்டமிட்டுள்ளதாக பிரபாகரன் கூறினார்.

இதனிடையே, பயனுள்ள நோக்கத்திற்காக மித்ராவின் நிதியை பெறுவதற்கு அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள், இம்மாதம் 15 தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதிவரை அதன் அகப்பக்கத்தின் வழி விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி