May 18, 2026
Thisaigal NewsYouTube
தம்முடைய அமைதி இந்திய சமுதாயத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள்படாது
தற்போதைய செய்திகள்

தம்முடைய அமைதி இந்திய சமுதாயத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள்படாது

Share:

கோலாலம்பூர், ஜூலை.03-

தாம் அமைதி காத்து வருவது மூலம் மலேசியாவில் இந்திய சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைத் தாம் தீவிரமாகக் கையாளவில்லை என்று பொருள்படாது என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் இன்று விளக்கம் அளித்தார்.

நீண்ட காலமாகவே தாம் அமைதியாக, திரைக்குப் பின்னால் இந்திய சமுதாயத்தின் மேன்மைக்குரிய பங்களிப்பை வழங்கி வரும் முறையைத் தேர்வு செய்து, அதற்கான பணிகளைச் செய்து வருவதாக முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா குறிப்பிட்டார்.

13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தை மேன்மையுறச் செய்வதற்கு 40 அம்சங்களை உள்ளடக்கிய பரிந்துரை ஒன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸ்ஸா கலந்து கொள்வதாக இருந்தது.

எனினும் நூருல் இஸ்ஸா கலந்து கொள்ள முடியாமல் போனதைத் தொடர்ந்து, அவர் அனுப்பி வைத்த செய்தியை கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ வாசித்தார்.

எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் பொதுமக்களின் கவனத்தை விட அர்த்தமுள்ள முடிவுகளுக்குத் தாம் முக்கியத்துவம் அளித்து வருவதாக நூருல் இஸ்ஸா அந்தச் செய்தியில் விளக்கியிருந்தார்.

Related News

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன