Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விஜய் மகன் சஞ்சய்யின் படம் கைவிடப்பட்டதா?

Share:

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என அறிவித்தனர்.

ஹீரோ குறித்து அறிவிப்பு வெளியான நிலையிக், படப்பிடிப்பும் விறுவிறுப்பாக சென்னையில் தொடங்கியது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படம் கைவிடப்பட்டது எனப் பேசத் தொடங்கி விட்டனர்.

ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

லைகா நிறுவனத்திடம் இருந்து ரூ. 25 கோடியை இப்படத்திற்கான பட்ஜெட்டை சஞ்சய் வாங்கி விட்டாராம். இதனால் படப்பிடிப்பிற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும், படம் கைவிடப்பட்டது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Related News

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்