சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளியைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் தனது இருக்கையை பின்னால் சாய்த்து வைத்து, ஒரு கையால் மட்டுமே ஸ்டீயரிங் சக்கரத்தை கட்டுப்படுத்தும் காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளதாக அலோர் காஜா போலீஸ் தலைவர் அகமட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த சம்பவம் வடக்கு–தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிப் பயணிக்கும் 196.1 கிலோமீட்டர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
அப்போது பேருந்து கோலாலம்பூரிலுள்ள TBS பேருந்து நிலையத்தில் இருந்து ஜொகூர் பாருவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் அகமட் அபு பக்கர் குறிப்பிட்டுள்ளார்.








