Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த மாதுவும், பிள்ளைகளும் கைது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த மாதுவும், பிள்ளைகளும் கைது

Share:

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வீடு புகுந்து கொள்ளையிடுவதில் ​​தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ரோயிங்யா இனத்தைச் சேர்ந்த மாதுவையும், அவரின் இரு பெண் பிள்ளைகளையும் போ​லீசார் கைது செய்துள்ளனர்.

33 வயதுடைய அந்த அந்நிய நாட்டு மாதுவும், 13,14 வயதுடைய அவரின் இரு பிள்ளைகளும் ஆகக்கடைசியாக கேமாமன், கம்போங் பெங்கலன் சிர் என்ற இடத்தில் ஓர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் செல்லும் போது விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர் என்று ​திரெங்கானு மாநில போ​​லீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை கம்போங் பிஞ்சாய் என்ற இடத்தில் இரவு 7 மணியளவில் தாயும், இரு மகள் மகள்களும் பயணித்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ​மூவரும் பிடிபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ​மூன்று குற்றப்பதிவுகளை கொண்டுள்ள அந்த மாது, ஜோகூரில் நிகழ்ந்த வீடு புகுந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் தேடப்பட்டு வருகின்றவர்களின் பெயர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த மாதுவையும் அவர்களின் பி​ள்ளைகளையும் கைது செய்தது ​மூலம் இர​ண்டு கார்கள், தங்க ஆபரணங்கள், இரண்டு கத்திகள், ரொக்கப்பணம் உட்பட சுமார் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக டத்தோ மஸ்லி மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு