Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எல்லா அமலாக்கப் பிரிவும் அரிசி உற்பத்தியாளர்களையும் மொத்த வியாபாரைகளையும் சோதனை செய்யலாம்
தற்போதைய செய்திகள்

எல்லா அமலாக்கப் பிரிவும் அரிசி உற்பத்தியாளர்களையும் மொத்த வியாபாரைகளையும் சோதனை செய்யலாம்

Share:

நாடு முழுவதுஜ் அனைத்து அமலாக்கப் பிரிவினரும் அரிசி உற்பத்தியாளர்களையும் மொத்த விற்பனையாளர்களையும் சோதனை செய்யலாம் என வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.

அரிசி, நெல் ஒழுங்கு முறைச் சட்டம் 1994 பிரிவு 6இன் படி இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அவர் விளக்கினார்.

இந்த சோதனை நடவடிக்கை தொடர்பாக வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சில் ஒருங்கிணைந்த செயலகத்தை உருவாக்குவதோடு முன்னதாகக் குறிப்பிட்டச் சட்டப்படி அமைச்சின் அதிகாரத்தை அனைத்து வகை அமலாக்கப் பிரிவுக்கும் வழங்குவதாக இன்று அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான் ஃபூங் ஹின் தலைமையில் ஒரு பணிக்குழுவை உருவாக்கி பச்சரிசி தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என கடந்த திங்கட்கிழமை அமைச்சர் டத்தோ செரி முஹமாட் சாபு அறிவித்திருந்தார்.

இந்தச் சோதனையில் பச்சரிசி, நெல் ஒழுங்குமுறை அமைப்பு கேபிபி, உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு கேபிடிஎன் அரச மலேசியக் காவல் துறை பிடிஆர்எம், அரச மலேசிய சுங்கத் துறை ஜேகேடிஎம், மலேசிய தனிமைப்படுத்தல், சோதனை சேவை திணைக்களம் மகிஸ் ஆகிய அமலாக்கப் பிரிவுகள் ஈடுபடும்.

இன்று தொடங்கிய அந்தச் சோதனை நடவடிக்கையில் 93 தொழிற்சாலைகள், 130 மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் ஆகியோரோடி நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் முக்கிய துறைமுகங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு குறிப்பிடுகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து