நெகிரி செம்பிலான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹாரூனுக்கு அளித்து வந்த ஆதரவை 'அம்னோ' கட்சி திடீரென வாபஸ் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமினுடின் இன்று மதியம் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளையில், 11 இடங்களைக் கொண்டுள்ள ஜசெக கட்சியும் தனது அலுவலகத்தில் தனித்துக் கூடி ஆலோசிக்க உள்ளது.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான சமஸ்தாபதயை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாகவே, அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாக மாநிலத் தலைவர் ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார். இதனால் அம்மாநில ஆட்சியில் நிலைத்தன்மையற்ற சூழல் உருவாகியுள்ளது.








