Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அம்ரி, கோ வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்துறை அலுவலகம் முடிவு
தற்போதைய செய்திகள்

அம்ரி, கோ வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்துறை அலுவலகம் முடிவு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் பாதிரியார் ரேய்ம்ண்ட் கோ ஆகியோர் வழக்குகளில், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதியின் முடிவை மறுபரிசீலனை செய்த பிறகு, தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை, உயர்நீதிமன்ற நீதிபதி சூ தியாங் ஜூ வழங்கிய தீர்ப்பில், அரசாங்கமும், போலீஸ் துறையும், அம்ரி சே மாட்டின் மனைவி நோர்ஹாயாத்தி முகமட் அரிஃபினுக்கு 3 மில்லியன் ரிங்கிட்டும், ரேய்மண்ட் கோ குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட்டும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெர்லிஸில் அம்ரி சே மாட் கடத்தப்பட்டதாக நம்பப்பட்ட நிலையில், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெட்டாலிங் ஜெயாவில் பாதிரியார் ரேய்மண்ட் கோ மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இந்த இரு கடத்தல் சம்பவங்களும் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்