May 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

Share:

டிச. 30-

பிரமுகர் ஒருவரின் மகனை அடித்துக் காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபர் ஒருவர், அவரின் மகள், அவரின் மருமகன் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் என ஐவர் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்

டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபரான 62 வயது முகமட் ஃபாஸில் ஷாபி, அவரின் 33 வயது மகள் நூர் அமலினா, 32 வயது மருமகன் அம்ரான் அஸ்மி, நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களான 28 வயது அஸ்ருல் ஷாபிக் ரோஸ்மான், 37 வயது அஸியான் அப்துல் ரஹிம் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் பிரமுகர் ஒருவரின் மகனான 30 வயது முகமட் நூர் ஹக்கிம் என்பவரை அடித்து காயப்படுத்தியாக டத்தோஸ்ரீ உட்பட ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு