Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதில் வரையறையை நிர்ணயிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதில் வரையறையை நிர்ணயிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.23-

பூடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் கிடைக்கும் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை, மக்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே வாங்க முடியும் என்ற வரையறையை நிர்ணயிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று நிதி அமைச்சு இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

அதே வேளையில் மலேசியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிச் செய்வதற்காக மானிய விலையில் விற்கப்படும் எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன்95 விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தியாகும் என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பூடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசிலிருந்து 1 ரிங்கிட் 99 காசாகக் குறைக்கப்படவிருக்கிறது.

செல்லத்தக்க வாகனமோட்டும் உரிமம் கொண்ட 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் மானிய விலையில் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்.

சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனும் சாரா உதவித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் அதே வழிமுறையிலேயே மைகாட் அட்டையைப் பயன்படுத்தி அவ்வகை பெட்ரோலை மலேசியர்கள் வாங்க முடியும்.

ஒவ்வொரு மலேசியரும் மாதத்திற்கு 300 லிட்டர் மானிய விலையில் ரோன்95 பெட்ரோலைப் பெற உரிமை உண்டு, இருப்பினும் இ-ஹெய்லிங் வாகனச் சேவைகள் இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து