Aug 2, 2026
Thisaigal NewsYouTube
முகமூடி அணிந்த இருவரால் வெட்டப்பட்ட ஆடவர்
தற்போதைய செய்திகள்

முகமூடி அணிந்த இருவரால் வெட்டப்பட்ட ஆடவர்

Share:

நேற்றிரவு கிளாந்தான், பாசிர் பூத்தேயில் உள்ள கம்போங் வாக்காஃப் பெராங்ஙான் நடந்த சம்பவத்தில் முகமூடி அணிந்த இருவரால் பலமுறை வெட்டப்பட்டதில் 55 பயதுடைய ஆடவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.

அந்த ஆடவர் தமது நண்பருடன் உணவகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத இருவரால் பாராங்கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் குறித்து தமது தரப்புக்கு இரவு 10.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக பாசிர் பூத்தே காவல் துறை தலைவர் சைசுல் ரிசால் சகாரியா தெரிவித்தார்.

தாக்கிய பிறகு சாம்பல் நிற ப்ரோத்தோன் சாகா காரில் அந்த இருஅரும் தப்பிச் சென்றதாகவும் ஏற்கெனவே அந்தக் காரில் மூன்றாவது நபர் ஒருவர் இருந்ததாகவும் நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அவசர முதலுதவிக்காக பாசீர் பூத்தே தெங்கு அனிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் கூபாங் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சைசுல் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை குற்றவியல் சட்டம் 326இன்படி மேற்கொள்வதாக சைசுல் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு