இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 64 ஆயிரத்து 734 வெள்ளி பெறுமானமுள்ள ஈமச்சடங்கிற்கான கட்டணத்திற்குரிய போலி ஆவணங்களை சமர்ப்பித்த 10 குற்றங்களுக்காக, நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு, குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று 13 மாத சிறைத்தண்டனையை விதித்தது. அத்துடன் 68 ஆயிரத்து 500 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
36 வயதுடைய Mohd Azlan Jainal, என்ற அந்நபர் மத்திய நில மேம்பாட்டு வாரியமான Felda வின், 64 ஆயிரத்து 734 வெள்ளி மதிப்பிலான 10 காசோலைகள் தொடர்பில், போலி ஆவணத்தை சமர்பித்ததாகக் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 முதல் ஏப்ரல் 30 வரை, Maran, Bandar Tun Abdul Razak Jengka வில் உள்ள Bank Islam Malaysia Berhad டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி


