இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 64 ஆயிரத்து 734 வெள்ளி பெறுமானமுள்ள ஈமச்சடங்கிற்கான கட்டணத்திற்குரிய போலி ஆவணங்களை சமர்ப்பித்த 10 குற்றங்களுக்காக, நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு, குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று 13 மாத சிறைத்தண்டனையை விதித்தது. அத்துடன் 68 ஆயிரத்து 500 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
36 வயதுடைய Mohd Azlan Jainal, என்ற அந்நபர் மத்திய நில மேம்பாட்டு வாரியமான Felda வின், 64 ஆயிரத்து 734 வெள்ளி மதிப்பிலான 10 காசோலைகள் தொடர்பில், போலி ஆவணத்தை சமர்பித்ததாகக் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 முதல் ஏப்ரல் 30 வரை, Maran, Bandar Tun Abdul Razak Jengka வில் உள்ள Bank Islam Malaysia Berhad டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


