இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 64 ஆயிரத்து 734 வெள்ளி பெறுமானமுள்ள ஈமச்சடங்கிற்கான கட்டணத்திற்குரிய போலி ஆவணங்களை சமர்ப்பித்த 10 குற்றங்களுக்காக, நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு, குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று 13 மாத சிறைத்தண்டனையை விதித்தது. அத்துடன் 68 ஆயிரத்து 500 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
36 வயதுடைய Mohd Azlan Jainal, என்ற அந்நபர் மத்திய நில மேம்பாட்டு வாரியமான Felda வின், 64 ஆயிரத்து 734 வெள்ளி மதிப்பிலான 10 காசோலைகள் தொடர்பில், போலி ஆவணத்தை சமர்பித்ததாகக் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 முதல் ஏப்ரல் 30 வரை, Maran, Bandar Tun Abdul Razak Jengka வில் உள்ள Bank Islam Malaysia Berhad டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


