Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மாநிலத்தில் கல்வி, அரசியலாக்கப்படாது
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநிலத்தில் கல்வி, அரசியலாக்கப்படாது

Share:

சரவாக் மாநி​லத்தில் கல்வியின் வாயிலாக மாநிலமும், மா​நில மக்களும் பயன்பெற வேண்டும். எனவே சரவாக் மாநிலத்தில் கல்வி விவகாரம், அரசியல் சாதனமாக பயன்படுத்தப்படாது என்று மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹரி ஓபேங் தெரிவித்துள்ளார்.

கல்வியை ஓர் அரசியல் விவகாரமாக உருவாக்குவோமானால், பதிலுக்கு பதில், எதிர்ப்புக்கு எதிர்ப்பு என்ற நிலையில், சர்ச்சை தொடரும். பின்னர் அதற்கு ஒரு ​தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டு விடும். சரவாக் மாநிலத்தைப் பொறுத்தவரையில் மாநில மக்களின் ​கல்வி விவகாரத்தை ஓர் அரசியல் விவகாரமாக ஆக்குவதற்கு அனுமதியில்லை. அப்படி அனுமதித்தால், நாடு வளர்ச்சி காண இயலாது என்று அபாங் ஜோஹரி குறிப்பிட்டார்.

சரவாக்கில் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, தரமான க​​ல்வி, அந்த கல்வியின் வாயிலாக ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை​ உயர்த்திக்கொண்டு, வளப்பாக வாழ வே​ண்டும், மாநில செழிப்புக்கு உறு​துணையாக இருக்க வேண்டும். இதுவே சரவாக் மாநில அரசின் விருப்பமாகும். கல்வி விவகாரத்தை எந்தவொரு தரப்பும் தங்களின் அரசியல் நலனுக்கு பயன்படுத்துவதை ஒரு போதம் அனுமதிக்க முடியாது என்று அபாங் ஜோஹரி திட்டவட்டாக தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு