May 18, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் ஒருவர் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்தார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ஒருவர் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்தார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.02-

ஆடவர் ஒருவர், தனது ஹொண்டா சிட்டி ரகக் காரைச் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு பினாங்கு இரண்டாவது பாலத்திலிருந்து கடலில் குதித்த சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.

பினாங்கு இரண்டாவது பாலத்தின் பத்து காவானை நோக்கி 14.0 ஆவது கிலோமீட்டரில் அதிகாலை 4.23 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவரின் கைவிடப்பட்ட கார், அவ்வழியே கடந்தவர்களால் அடையாளம் காணப்பட்டு, போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

33 வயது வோங் கா வாய் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபரைத் தேடும் பணியைத் தீயணைப்பு, மீட்புப் படை முடுக்கி விட்டுள்ளதாக பினாங்கு மாநில உதவி இயக்குநர் ஜோன் சகூன் தெரிவித்தார்.

கடல்சார் அமலாக்கப் பிரிவுடன் கூட்டாக இணைந்து பாயான் லெப்பாஸ் மற்றும் பாகான் ஜெர்மால் நிலையங்களின் தீயணைப்பு, மீட்புப் படையினர், சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் அந்த ஆடவரைத் தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ஆடவர் ஒருவர் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்தார் | Thisaigal News