May 28, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை: முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய மகளிர் கொள்கையின் கீழ் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அக்கொள்கை அதில் கவனம் செலுத்தும் என மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ நன்ஸி ஷுக்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய நன்ஸி, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டு 5,249 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார். அதனைத் தவிர்த்து வேலைகளில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல சவால்களை அமைச்சு சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வேலைகளில் 56.2 விழுக்காட்டு பெண்கள் மட்டுமே உள்ளனர். அவ்வெண்ணிக்கைக் குறைவாகும். ஆண்களின் பங்கேற்பு 82.3 விழுக்காடு இருப்பதை நான்சி சுட்டிக் காட்டினார்.

பொது மற்றும் தனியார் துறையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்களின் ஈடுபாடு இன்னும் குறைவாகவே உள்ளது. தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்கை வலுப்படுத்த அதிக முயற்சிகள் தேவை என்பதை இது காட்டுவதாக நன்ஸி மேலும் கூறினார்.

Related News

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

பத்தாங் காலியில் 'ஹேண்ட் பிரேக்' இழுக்க மறந்த முதியவர் கார் மோதி உயிரிழப்பு

பத்தாங் காலியில் 'ஹேண்ட் பிரேக்' இழுக்க மறந்த முதியவர் கார் மோதி உயிரிழப்பு