கெடா மாநிலம் சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 70 வயது மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டனர்.
48 மணி நேரத்திற்கு முன்னரே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று மாலை சுமார் 6.05 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர்களது உடலில் எந்த ஒரு காயங்களும் கண்டறியப்படவில்லை என்பதால், சவப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்படும் என்றும் ஹன்யன் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.








