Mar 9, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங் அருகே தென்பட்ட புலி: அச்சத்தில் கிராம மக்கள் - வனத்துறை தீவிர கண்காணிப்பு
தற்போதைய செய்திகள்

குளுவாங் அருகே தென்பட்ட புலி: அச்சத்தில் கிராம மக்கள் - வனத்துறை தீவிர கண்காணிப்பு

Share:

ஜோகூர், குளுவாங் அருகே உள்ள ஸ்ரீ லாலாங், கம்போங் ரஹ்மத் பகுதியில் புலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் அப்பகுதி கிராம மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

சுமார் ஒரு நிமிடம் 36 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், தோட்டத்திற்குப் பின்னால் உள்ள புதர்களுக்கு இடையே புலி ஒன்று மெதுவாக நகர்ந்து செல்வது பதிவாகியுள்ளது.

தோட்ட உரிமையாளர் ஒருவர் தனது தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வாகனத்தில் சென்றபோது, புதர்களுக்குள் சத்தம் கேட்டுப் பார்த்ததில் இந்தப் புலி தென்பட்டதாக ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்த புகார், மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வனவிலங்குகளை நெருங்கவோ அல்லது அவற்றைச் சீண்டவோ வேண்டாம் என்றும், ஏதேனும் விலங்குகள் தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கோ அல்லது வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

பினாங்கில் 42 வீடுபுகுந்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் பிடிப்பு: 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

பினாங்கில் 42 வீடுபுகுந்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் பிடிப்பு: 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

இதய வலியால் துடித்த ஓட்டுநர்: சாலை நெரிசலைச் சீர்செய்து உயிரைக் காத்த போக்குவரத்துப் போலீஸார்!

இதய வலியால் துடித்த ஓட்டுநர்: சாலை நெரிசலைச் சீர்செய்து உயிரைக் காத்த போக்குவரத்துப் போலீஸார்!

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஜொகூர் பாருவை விட கோலாலம்பூரில் விலைவாசி குறைவு: இடமாறிய பெண்ணின் கருத்தால் சமூக ஊடகங்களில் விவாதம்

ஜொகூர் பாருவை விட கோலாலம்பூரில் விலைவாசி குறைவு: இடமாறிய பெண்ணின் கருத்தால் சமூக ஊடகங்களில் விவாதம்

சமூக ஊடக விளம்பர யுக்தி: தெருநாய்களுக்குப் புது வாழ்வு அளிக்கும் மலேசிய மாணவர்

சமூக ஊடக விளம்பர யுக்தி: தெருநாய்களுக்குப் புது வாழ்வு அளிக்கும் மலேசிய மாணவர்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும் அரசின் முயற்சிக்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும் அரசின் முயற்சிக்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு