May 6, 2026
Thisaigal NewsYouTube
அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலே
தற்போதைய செய்திகள்

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலே

Share:

சிரம்பான், டிசம்பர்.13-

கடந்த புதன்கிழமை சிரம்பான், ஜாலான் ராசா – மம்பாவ் சாலையில் போர்ட்டிக்சனுக்குச் செல்லும் டோல் சாவடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குண்டர் கும்பல் சம்பந்தப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கையே என்று சந்தேகிக்கப்படுவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டினால் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் இந்தச் சம்பவத்தில், போலீசார், இதுவரை மூன்று நபர்களைக் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மூன்று சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரின் வீட்டில் கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்தத் துப்பாக்கியே சம்பவம் நடந்த அன்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேகப் பேர்வழிகளையும், சாட்சிகளையும் போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்