Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராகும் விவகாரம் /27 கேள்விகளுக்கு பதில் அளித்தார் லிம் கிட் சியாங்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராகும் விவகாரம் /27 கேள்விகளுக்கு பதில் அளித்தார் லிம் கிட் சியாங்

Share:

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராக வர முடியும் என்ற கருத்தை வெளியிட்டதாக கூறி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிடம் அரச மலேசியப் போலீஸ் படை, இன்று விசாரணை நடத்தியுள்ளது.

போலீஸ் துறை முன்வைத்த கேள்விகளில் 27 கேள்விகளுக்கு லிம் கிட் சியாங் பதில் அளித்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் கைரில் காலிட் தெரிவித்தார்.

போலீசாரின் இந்த விசாரணை பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதமராக மலாய்க்காரர் அல்லாத ஒருவர் வர முடியுமா? முடியாதா? என்று மாணவர் சமுதாயம் முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை மேற்கோள்காட்டி, லிம் கிட் சியாங் பேசியிருந்தது தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Related News