May 26, 2026
Thisaigal NewsYouTube
5 கேடட் அதிகாரிகள் அதிரடியாக பணி நீக்கம்
தற்போதைய செய்திகள்

5 கேடட் அதிகாரிகள் அதிரடியாக பணி நீக்கம்

Share:

கோலாலம்பூர், நவ. 27-


மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சியில் பங்கேற்ற கேடட் பயிற்சியாளர்களை பகடிவதை செய்து, அராஜகம் புரிந்த குற்றத்திற்காக அந்தப் பல்கலைக்கழகத்தின் 5 கேடட் பயிற்றுநர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான பணி ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஐவரும், அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு முன்னதாக, கேடட் பயிற்சியை மேற்கொண்டது, அதிகாரிகளுக்கான பயிற்சியைப் பெற்றது தொடர்பில் அவர்களுக்காக அரசாங்கம் செலவிட்டத் தொகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டீன் தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சு மற்றும் சட்டத்துறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அவர்கள் எதிர்நோக்கியுள்ள மற்ற நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

பயிற்சி மாணவரின் நெஞ்சுப்பகுதியில் ஸ்திரீ பெட்டியினால் சூடு வைத்தது உட்பட பயிற்சி மாணவர்களுக்கு எதிராக பல்வேறு அராஜகங்களை புரிந்ததாக அந்த ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது

Related News

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்