Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கோவில் நிகழ்ச்சியின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

கோவில் நிகழ்ச்சியின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பிய நபர் கைது

Share:

கோல சிலாங்கூர், செப்டம்பர்.02-

கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங் தோட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கி வேட்டை கிளப்பிய நபரைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் D9 பிரிவு, கோல சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த நபர் நேற்றிரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார். 55 வயதுடைய அந்த நபர் விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

கோவிலுக்கு அருகில் பிற்பகல் 3.50 மணியளவில் அந்த நபர், வானை நோக்கித் துப்பாக்கி வேட்டை கிளப்பிய காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இது தொடர்பாக போலீஸ் புகார் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு