Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார மைய விவகாரம்: 171 ஆடவர்களின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

சுகாதார மைய விவகாரம்: 171 ஆடவர்களின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.01-

தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை, சுகாதார மையம் ஒன்றில் நடந்த ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 171 ஆடவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும் போலீஸ் விண்ணப்பத்தை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

அதிக எண்ணிக்கையிலான கைது என்பதால், விண்ணப்பம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தங்களது விண்ணப்பங்களை நிராகரித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அந்தச் சுகாதார மையத்தில் மொத்தம் 202 ஆடவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 31 வெளிநாட்டினர் என்பதால், அவர்களை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு