Jul 4, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: போலீசார் விசாரணை

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.20-

ஜோகூர் பாரு, ஶ்ரீ ஆலாம், தாமான் மேகா ரியாவில் உள்ள ஒரு தளத்தில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று இரவு 7.10 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபரைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்ததாக நம்பப்படும் அந்த சந்தேக நபர், துப்பாக்கி போன்ற ஒரு சுடும் ஆயுதத்தைக் கொண்டு, அந்த தளத்தில் இருந்த நபரை, பணத்தை ஒப்படைக்கும்படி அச்சுறுத்தியுள்ளார். அதே வேளையில் எச்சரிக்கும் வகையில் ஒரு துப்பாக்கி வேட்டையும் கிளப்பி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

எனினும் இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் பாதிக்கப்பட்ட நபர், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் கொண்டுள்ளர்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது