சபா, சண்டக்கான், கம்பங் பஹாகியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த 300 குடும்பங்களுக்கு தலா 1,500 ரிங்கிட் உடனடி ரொக்க உதவி வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று பாதிக்கப்பட்ட இடத்தைப் நேரில் பார்வையிட்ட பிரதமர், இந்த நிதி உதவி 'நட்மா மற்றும் பிரதமர் துறையின் கீழ் உள்ள ஒருங்கிணைப்புப் பிரிவின் மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 454 மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் பள்ளி உதவித் தொகையும் வழங்கப்படும்.
தவிர, தீ விபத்தில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு, உள்துறை அமைச்சின் மூலம் புதிய ஆவணங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.








