மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஜெட் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஏர்ஏசியா எக்ஸ் விமான நிறுவனம் புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக விமானக் கட்டணங்கள் 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக பொது முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை பீப்பாய்க்கு 90 டாலரிலிருந்து தற்போது 200 டாலராக உயர்ந்துள்ளதே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
இந்தச் சூழலைச் சமாளிக்க ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனம் தனது விமானச் சேவைகளில் 10 விழுக்காட்டைக் குறைத்துள்ளதுடன், லாபகரமான வழித்தடங்களில் மட்டும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி வருகிறது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க பழைய விமானங்களுக்குப் பதிலாக புதிய மாடல்களைப் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் நிறுவனம் எடுத்துள்ளது.








