Mar 24, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை 5-

கோலாலம்பூர், புக்கிட் ஜலீல், அவன் பெசார், LRT ரயில் நிலையத்திற்கு அருகில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 6 கார்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரவீந்தர் சிங் சர்பன் சிங் தெரிவித்தார்.

சேதமடைந்த அனைத்து கார்களையும் அவற்றின் உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் அவ்விடத்தில் நிறுத்தி வைத்துள்ளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டிருப்பவர்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News