வீட்டில் எரிவாயு களன் வெடித்ததில் கணவன், மனைவி கடும் காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.54 மணியளவில் ஜோகூர்பாரு, பாக்கார் பத்து, ஃப்லாட் டேசா மலாயு என்ற அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லார்க்கின் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தை சேர்ந்த வீர்கள் காயமுற்ற கணவன், மனைவிக்கு மெர்ஸ்999 மருத்துவக்குழு மூலம் முதல் உதவி சிகிச்சை அளித்ததுடன், ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்க உதவினர். எரிவாயு களன் எவ்வாறு வெடித்தது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


