பேரா, சுங்கை சிப்புட் வடக்கு, சுங்கை ரேலா தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 11.00 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சிம்மோர், கந்தான் கல்லுமலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தலைமை குருக்கள், சிவ ஸ்ரீ ஜெ. மனோகர் குருக்கள் தலைமையில் அன்னை மகா மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. கேசவன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்கோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருட்கடாட்சம் பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


