பேரா, சுங்கை சிப்புட் வடக்கு, சுங்கை ரேலா தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 11.00 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சிம்மோர், கந்தான் கல்லுமலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தலைமை குருக்கள், சிவ ஸ்ரீ ஜெ. மனோகர் குருக்கள் தலைமையில் அன்னை மகா மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. கேசவன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்கோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருட்கடாட்சம் பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


