பேரா, சுங்கை சிப்புட் வடக்கு, சுங்கை ரேலா தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 11.00 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சிம்மோர், கந்தான் கல்லுமலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தலைமை குருக்கள், சிவ ஸ்ரீ ஜெ. மனோகர் குருக்கள் தலைமையில் அன்னை மகா மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. கேசவன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்கோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருட்கடாட்சம் பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


