பேரா, சுங்கை சிப்புட் வடக்கு, சுங்கை ரேலா தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 11.00 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சிம்மோர், கந்தான் கல்லுமலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தலைமை குருக்கள், சிவ ஸ்ரீ ஜெ. மனோகர் குருக்கள் தலைமையில் அன்னை மகா மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. கேசவன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்கோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருட்கடாட்சம் பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


